கடந்த நான்கு ஆண்டுகளில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான விருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, அரசியல் ஆட்சி மாற்றம் என்பன இயக்கச்சமன்பாட்டை நிலைகுலையச் செய்தது இருந்தபோதிலும், சட்டத்தரணி முஷாரப் எம்.பி தீர்வுகளை நோக்கி வினைத்திறனாக செயற்பட்டு வெற்றியும் கண்டார். 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்த கடினமான சூழ்நிலையிலும், பல கோடிக்கும் அதிகமான மொத்த முதலீட்டுடன், இந்த முயற்சிகள் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வாழ்வியல் தேவைகளான, கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

chart.png

சட்டத்தரணி முஷாரப், தனது பாராளுமன்ற உறுப்புரிமை காலப் பகுதியில் செயல்வீரராக திகழ்ந்தார் என்பதற்கு அவர் வழங்கிய தீர்வுகளும் திட்டங்களுமே சாட்சியாய் இருக்கின்றன. செயலால் பேசும் சேவகனாய் தன்னை தொடர் இயங்குநிலையில் வைத்திருந்ததால், manthri.lk தளத்தின் சுயாதீன தரப்பபடுத்தலில் முஷாரப் எம்.பி. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்றிறன் அடிப்படையில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்தததை நாம் ஞாபகமூட்டுகிறோம்.

1. முஷாரப் எம்.பியின் சிறப்பான சாதனைகளும் நீடித்த தீர்வுகளும்:

  1. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காணி விடுவிப்பு (ஆகஸ்ட் 2023)
  2. 65m சுனாமி வீட்டுத்திட்டம் விடுவிப்பு (ஏப்ரல் 2023)
  3. சம்புநகர் காணி உரிமம் (மே 2023)
  4. நாவிதன்வெளி காணி உரிமை (மே 2023)
  5. மேலும் பல முக்கிய சாதனைகள்:

இந்த சாதனைகள் காட்டுவது:

2. பாராளுமன்றில் முஷாரப் எம்.பியின் முக்கிய செயற்பாடுகளும் சமர்ப்பிப்புகளும்:

  1. இளைஞர் கல்வி மேம்பாட்டுக்கான முன்னெடுப்பு
  2. நிபுணத்துவ அணி உருவாக்கம்
  3. விவசாய நில உரிமைக்கான குரல்